Gordon Peckhom அவனுடைய எடுபிடி ஆட்களுடன் செண்பகனூர் (கொடைக்கானல்) பங்களாவில் இருந்து இறங்கும் போதே துபாஷ் 1* தடுத்தான் பிரசாதம் வாங்குவது போல். மோவாயில் கையை வைத்து உடலை இரண்டாக மடித்து Sir , A Humble request .Sir ! It is already the Sun came up sir ! Why Don 't we start tomorrow Sir !! Because It is not good to Cross those villages after sunset sir !
அசட்டு தைரியமும் , புது பதவி கொடுத்த ஆணவமும் , கோர்டானை எப்போதும் நிதானம் அற்றவனாகவே வைத்திருந்தது . பிடிவாதமாக கிளம்பினான். சோர்ந்து விட்ட குதிரைகளுக்கு பெரியகுளம் வரும்போது வாயில் நுரை தள்ளி விட்டது! ''இந்த கூறு கெட்ட பயலிடம் சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை'' என்று துபாஷ் வாயை மூடிக் கொண்டான் .சோர்ந்து விட்ட ஆட்களை பார்த்த துரைக்கு அவர்களை மேலும் சிரமப்படுத்த அடங்காத ஆசை ஏற்பட்டது . நிற்க விடாமல் தன் குதிரையை வேகமாக ஓட்டினான் .
"பாவி பயல் !! எங்கயாவது அடிபட்டு சாவான் !! முனங்கினாலும் வேறு வழியில்லாமல் அனைவரும் அவனை பின்தொடர்ந்தனர் .
சூரியன் சுத்தமாக மறைய இருள் கவ்விய பாதையில் இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள். அவற்றின் பெரிய கிளைகள் தீப்பந்த ஒளியில் அரக்கனின் கைகள் போல் அலைந்து திகில் கிளப்பியது! இந்த ஊர்வலம் ஒரு நாழிகை அமைதியாகவே சென்றது . உள்ளே ஒரு பயப் பந்து தொண்டையை அடைக்க வெளியே காட்டாமல் Gordon துரை ,"குட்டு உடாகாரா குருவப்பா "2* என்று அமைதியாக குதிரையை செலுத்திக் கொண்டிருந்தான் .
துபாஷி ன் அலறல் கேட்ட போது கீழே விழுந்து விட்டான் என்றுதான் அனைவரும் திரும்பி பார்த்தனர். ஆனால் அடுத்தடுத்து , தொம் ! தொம் ! என்று பெரிய தேங்காய் அளவு உருண்டை கற்கள் நாலா பக்கங்களில் இருந்தும் அம்பு போல் பறந்து வந்து இரக்கம் இல்லாமல் தாக்கின .மூச்சு விட நேரம் இல்லை ! துரையாவது ? மண்ணாங்கட்டியாவது ? அவனவன் திக்கு திசை தெரியாமல் சிதறி ஓடினான் ! அடர்ந்த புதர்களால் துரைக்கு ஒரு கண்ணெழவும் தெரிய வில்லை . முட்டாபயலுக்கு என்ன நடக்குதுன்னும் புரியல? மேல வந்து விழுறது கல்லு தான்னு புரிஞ்சு சுதாரிக்கிற துக்குள்ளே ஏழெட்டு கல்ல மேல வாங்கிட்டான் !
மூஞ்சி முகரையெல்லாம் இரத்தம் ! பாவி பயலை ஏத்தின பாவத்திற்கு தானும் கல்லடி வாங்கிய குதிரை பாவம் தறிகெட்டு ஓடி குப்பற விழுந்தது!
ஏமிரா தோவல ஏமோ கூத்தலு ! போய் சூடண்ரா !3* சத்தமாக கூவிக்கொண்டே கதவை திறந்து ஓடி வந்த வெங்கப்ப நாயக்கரின் காலடியில் தொப்பென மூட்டை மாதிரி வந்து விழுந்தான் gordon durai !! விழுந்தது அடிபட்ட ஆள் என தெரியவும், கூப்பாடு போட்டு ஊரை கூட்டிய அவர் அவனுக்கு வேணுமான காரியத்தை செய்ய ஆரம்பித்தார். காயத்தை துடைத்து பச்சிலைகளை உருவி நசுக்கி காயம் பட்ட இடத்தில் கட்டினார் . "தெப்படம் ! எருசி போய் உண்ணான்டுரா '' 4*கேலி பேசினாலும் துரைக்கு நல்ல வைத்தியம் செய்யப்பட்டது.
இது இத்தோடு நிற்கவில்லை ! தொடர்கதையானது ! ஒவ்வொருதரம் துரைமார் கல்லடி வாங்குவதும் நாயக்கன்மார் கட்டு போட்டு கவனித்து அனுப்புவதும் தொடர்ந்தது . பாவம் துரைகள் ! இதில் அடி ஒவ்வொன்னும் இடியா இருக்க," அழகாச்சும்? அழகான பொண்ணாச்சும் போங்கப்பா!!''
வழக்கமாக பழைய ஆட்களின் குடியிருப்புக்கு அருகே தான் அடி விழ ஆரம்பிக்கும் ! அதனால் அவர்கள் தான் அனைத்துக்கும் காரணம் என ஒற்றர்களால் சொல்லப்பட்டது . வெள்ளையர்களால் கட்டி வைத்து உதைக்கப்பட்ட அவன்கள் செத்தாலும் நாங்க செய்யலனுதான் சொன்னானுங்க ! யாரும் நம்பல ! வெள்ளையர்களால் முழுதும் மதிக்கப்பட்ட நம்மவங்க அப்புறம் நிம்மதியா இருந்தாங்க! ஒதுக்குபுறமா இருந்த அவங்க மொத்த ஊருக்கும் உரிமைபட்டவங்க ஆயிட்டாங்க !!அவங்களை பொருத்தமட்டும் அவங்க எவனுக்கும் கை கட்டல! கட்டவும் மாட்டாங்க !
ஒரு நிமிஷம் !! கடைசி மட்டும் கல்லெடுத்து அடிச்சவனுங்க யாருன்றது எனக்கு பெரும் குழப்பமாவே இருக்கு! உங்களுக்கு தெரிஞ்சா நீங்களாவது எனக்கு சொல்லுங்க!!!!!!!Please !!!!
1*-மொழிபெயர்ப் பாலர்
2*உன் மனதில் உள்ளதை வெளியே கட்டாதேடா குருவப்பா ! (common slang )
3*ஏதோ சத்தம் கேட்குது ! போய் பாருங்கடா !
4* முட்டாள்! பயந்து போய் இருக்கான் !


No comments:
Post a Comment